இளையோர்களின் தவக்கால ஒறுத்தல் முயற்சியாக இருதயபுரம் திரு இருதயநாதர் ஆலய கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தினரும் ஆலய உயர்தர மாணவர் ஒன்றியமும் இணைந்து 17வது வருடமாக நடாத்தும் இரத்ததான முகாம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
இவ் இரத்ததான முகாமானது திரு இருதயநாதர் ஆலய மண்டபத்தில் 22.03.2026 அன்று காலை 08.30 மணி தொடக்கம் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது.
இவ் உதிரம் கொடுத்து உயிர்காக்கும் பணியில் பங்களிப்பு செய்யுமாறு ஆலய கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தினரும் ஆலய உயர்தர மாணவர் ஒன்றியமும் கொடையாளிகளை கேட்டுக் கொள்கின்றனர்.



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










