மட்டக்களப்பு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்காக, ‘வெற்றிகரமான பெற்றோரியம்’ தொடர்பான விசேட பயிற்சி நெறி!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்காக, ‘வெற்றிகரமான பெற்றோரியம்’ (Successful Parenting) தொடர்பான விசேட பயிற்சி நெறியொன்று புதிய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 24.03.2026 அன்று நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜின் வழிகாட்டுதலின் கீழ், உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவனின் தலைமையில் இப்பயிற்சி நெறி முன்னெடுக்கப்பட்டது.

பயிற்சியின் முக்கிய அம்சங்கள்: மாவட்ட செயலக உத்தியோகத்தர்களின் குடும்ப மற்றும் பிள்ளைகளுடனான உறவை மேம்படுத்தும் நோக்கில், ‘மனோஹரி’ (Manohari Module) பயிற்சித் திட்டத்தின் ஒரு அங்கமான “நன்மை பயக்கும் பின்னூட்டல்” (Positive Feedback) எனும் தலைப்பில் விரிவான தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டன.

இப்பயிற்சியின் போது பின்வரும் விடயங்கள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டது:

  • பிள்ளை வளர்ப்புத் திறன்: நவீன காலச்சூழலுக்கு ஏற்ப பிள்ளைகளைச் சிறந்த முறையில் வளர்க்கும் கலை.
  • தொடர்பாடல்: பிள்ளைகளுடன் சரியான தருணத்தில் உரையாடுவதன் மூலம் அவர்களின் நடத்தையில் ஏற்படும் நேர்மறையான மாற்றங்கள்.
  • ஆரோக்கியமான வளர்ச்சி: பிள்ளைகளின் ஆரோக்கியமான பருவத்தைக் கையாள்வதற்கான நடைமுறை ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்கள்.

அனுபவப் பகிர்வு: பயிற்சியின் இறுதியில், பங்கேற்ற உத்தியோகத்தர்களிடையே கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், அவர்களின் தனிப்பட்ட அனுபவங்கள் மற்றும் பின்னூட்டல்களும் பகிர்ந்து கொள்ளப்பட்டன. பணிச் சூழலுக்கு மத்தியில் உத்தியோகத்தர்களின் மன அழுத்தத்தைக் குறைத்து, ஆரோக்கியமான குடும்பச் சூழலை உருவாக்க இவ்வாறான பயிற்சிகள் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects