மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ்க்கும் நியூசிலாந்து நாட்டுக்கான உயர் அதிகாரி சொனியா டக்லஸ்க்குமிடையிலான கலந்துரையாடல் புதிய மாவட்ட செயலகத்தில் 27.04.2026 அன்று நடைபெற்றது.
இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், பாக்கிஸ்தான் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான முறைசாரா குடியேற்ற தொடர்பு அதிகாரி சொனியா டக்லஸ் மாவட்டத்திற்கு முதல் முறையாக விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
இதன் போது முறைசார புலம் பெயர்வினால் ஏற்படும் பாதிப்புக்கள் மற்றும் பாதுகாப்பான புலம் பெயர்வு தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்கு உத்தியோகத்தர்களுக்கான பயிற்சிகள் மாவட்டத்தில் இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவன், இடம் பெயர்வு கொள்கை மேம்பாட்டுக்கான சர்வதேச மையத்தின் இணைப்பாளர் மெஹமட் சாமீர், மாவட்ட வெளி் நாட்டு வேலைவாய்ப்பு உத்தியோகத்தர் கே.ரமணபிரசாத், ICMPD நிறுவன பிரதிதிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இலங்கையில் இருந்து புலம் பெயரும் தொழிலாளர்களுக்கு அவர்களின் தொழில் கல்வித் தகமைக்கு ஏற்ப இலங்கை அரசாங்கத்தினால் சான்றிதழ்கள் வழங்க வேண்டும் என நியூசிலாந்து நாட்டுக்கான உயர் அதிகாரி சுட்டிக்காட்டினார்.






இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










