தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு குறித்து விடுத்துள்ள அறிவிப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

நாடு முழுவதும் நிலவும் பலத்த மழைவீழ்ச்சி காரணமாக, மலைப்பாங்கான பகுதிகளில், குறிப்பாக மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வாழும் மக்கள் நிலச்சரிவுக்கான ஆரம்ப அறிகுறிகள் குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) அறிவுறுத்தியுள்ளது.

அதன் அடிப்படையில், பலத்த மழையுடன் நிலச்சரிவுகள், மண் சரிவுகள் மற்றும் நில அதிர்வுகள் ஏற்படுவதற்கான அபாயம் அதிகரித்துள்ளதால், பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவது அவசியமானது என அந்த நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

இதற்கமைய, வீடுகளைச் சூழவுள்ள வடிகால் அமைப்புகளைச் சீர்செய்து மழைநீர் விரைவாக வழிந்தோடுவதற்கு வழிவகை செய்யுமாறும், வீட்டிற்கு மேலாக அமைந்துள்ள பாரிய மரங்கள் மற்றும் அபாயகரமான பொருட்களை அகற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், வீடுகளுக்குப் பின்னால் உள்ள உயர்ந்த மண் திட்டுகள் ஊடாக மழைநீர் பாயாதவாறு பாதுகாப்பு வடிகால் அமைப்புகளை அமைத்துக்கொள்ளுமாறும், கூரையிலிருந்து விழும் நீரை முறையாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மண்சரிவு அபாயப் பகுதிகளில் உள்ள மக்கள்மண்சரிவுக்கான ஆரம்ப அறிகுறிகளைத் தொடர்ந்து அவதானிக்குமாறும், சந்தேகத்திற்கிடமான நிலைகள் தென்பட்டால் உடனடியாக கிராம உத்தியோகத்தர் அல்லது உரிய அரச நிறுவனங்களுக்குத் தெரியப்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அவசர அனர்த்த நிலைமையின் போது, முடிந்தவரை விரைவாகப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுதல், அயலவர்களுக்குத் தெரியப்படுத்துதல் மற்றும் உரிய அதிகாரிகளுக்குத் தகவல்களை வழங்குதல் ஆகியவை மிகவும் முக்கியமானது என அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects