மட்டக்களப்பில் சீரற்ற காலநிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாக ஒரு மரணம் பதிவு – அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

நாட்டின் பல மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாக ஒரு மரணம் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் பிரிவிலேயே இந்த மரணம் பதிவாகியுள்ளதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் இன்று (13.05.2026) முற்பகல் 10.00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கையில் இத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலையினால் 4 மாவட்டங்களுக்கு உட்பட்ட 17 பிரதேச செயலாளர் பிரிவுகளில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, 62 குடும்பங்களைச் சேர்ந்த 203 நபர்கள் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 17 பேர் தற்காலிகப் பாதுகாப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும், 39 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அந்த நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects