காலி முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் “அம்பர்” நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.
காலி முதல் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.
மேலும் இக் கடற்பரப்புகளில் மணிக்கு 50-60 கிலோமீட்டர் (km/h) வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
கற்பிட்டி முதல் கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளின் கடல் அலைகளின் உயரம் சுமார் 2.0 – 2.5 மீற்றர் வரை உயரக்கூடும்.
மேற்கூறப்பட்ட கடற்பரப்புகளில் பயணிக்கும் கடற்படையினரும் மீன்பிடிச் சமூகத்தினரும் இது குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்கால வானிலை முன்னறிவிப்புகளை உன்னிப்பாகக் கவனிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










