192 உப தபால் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கி வைப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இலங்கை தபால் திணைக்களத்தில் நிலவும் மனிதவளப் பற்றாக்குறைக்குத் தீர்வாக, நீண்டகாலமாகப் தற்காலிகமாகப் பணியாற்றி வந்த 192 உப தபால் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனக் கடிதங்கள் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டுள்ளன.

பொதுச் சேவை ஆணைக்குழுவின் அங்கீகாரத்துடன், தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் இன்று (18.06.2026) நடைபெற்ற விசேட நிகழ்வின் போதே இந்நியமனங்கள் வழங்கப்பட்டன.

ஊடகத்துறை மற்றும் தபால் சேவைகள் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ மற்றும் பிரதி அமைச்சர் கௌஷல்ய ஆரியரத்ன ஆகியோரின் தலைமையில் இந்த நியமன விழா நடைபெற்றது.

இந் நிகழ்வில் தபால் திணைக்களத்தின் பிரதி தபால் அதிபர்கள், தபால் திணைக்கள நிறைவேற்று அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் மற்றும் நியமனங்களைப் பெற்றுக்கொண்ட 192 அதிகாரிகளின் குடும்ப உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects