அஸ்வெசும” நலன்புரித்திட்டத்தின் இரண்டாம் கட்ட பயனாளர்களுக்கான ஜூன் மாத மாதக் கொடுப்பனவு தொடர்பில் நலன்புரி நன்மைகள் சபை அறிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அதன் அடிப்படையில், அஸ்வெசும” நலன்புரித்திட்டத்தின் இரண்டாம் கட்ட பயனாளர்கள் ஜூன் மாத மாதக் கொடுப்பனவுகளை இன்று (23.06.2026) முதல் பெற்றுக்கொள்ள முடியும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
இந்தக் கொடுப்பனவு 270,025 குடும்பங்களுக்குக் கிடைக்கப்றவுள்ளதாக அந்தச் சபை அறிவித்துள்ளது.
இதற்கமைய, 3,287,163,750 ரூபா (மூன்று பில்லியன் இருநூற்று எண்பத்தேழு மில்லியன் இலட்சத்து அறுபத்து மூவாயிரத்து எழுநூற்று ஐம்பது ரூபாய்)இன்று (23.06.2026) உரிய பயனாளிகளின் அஸ்வசும கணக்குகளில் வைப்புச் செய்யப்படவுள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










