கொழும்பு பங்குச் சந்தை இன்று (21.01.2025) மற்றுமொரு குறிப்பிடத்தக்க இலக்கினை அடைந்துள்ளது.
வரலாற்றில் முதல் முறையாக, அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 16,500 புள்ளிகளைத் தாண்டியது , மேலும் S&P SL20 பங்கு விலைச் சுட்டெண் முதல் முறையாக 5,000 புள்ளிகளைக் கடந்துள்ளது.
நாள் முழுவதும் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 224.01 புள்ளிகள் உயர்ந்து 16,597.16 புள்ளிகளில் நிறைவடைந்த அதே வேளையில் , S&P SL20 விலைச் சுட்டெண் 94.71 புள்ளிகள் உயர்ந்து 5,056.74 புள்ளிகளில் நிறைவடைந்தது.
இன்றைய வர்த்தக நாள் நிறைவில் பங்குச் சந்தையின் மொத்த புரள்வு 8.31 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…