மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தினால், வனவிலங்கு கணக்கெடுப்பின் மூலம் பயிர்த்தாக்கத்தை ஏற்படுத்தும் வனவிலங்குகளின் கணக்கெடுப்பிற்கு பொதுமக்களை ஒத்துழைப்பு வழங்குமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதன் படி, பொதுமக்கள் கிராம உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் திட்டமிடல் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோரிடமிருந்து படிவங்களைப் பெற்று, 15.03.2025 அன்று காலை 8.00 மணி முதல் 8.05 மணி வரை (ஐந்து நிமிடத்துக்குள்) அந்த படிவங்களை பூர்த்தி செய்து, அன்றே மீண்டும் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை, வனவிலங்கு கணக்கெடுப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தி, பயிர்த்தாக்கம் மற்றும் விவசாயத்திற்கு எதிரான தீவிரமான பிரச்சனைகளுக்கு தீர்வு காண உதவும் என்றும் கூறப்பட்டுள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










