அஜீரணப் பிரச்சினைகளுக்கு நிவாரணமளிக்கும் அங்காயப் பொடி….
உணவு விடயத்தில் சுவையுடன் சேர்த்து ஆரோக்கியத்துக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அந்த வகையில் நமது முன்னோர்கள் நமக்கு காட்டிய அதி சிறந்தொரு பொருள் தான் அங்காயப் பொடி.
வேப்பம் பூ,சுண்டைக்காய், மணத்தக்காளி வற்றல், தனியா விதை, மிளகு, சீரகம், வெந்தயம், திப்பிலி, சுக்கு, பெருங்காயம் போன்றவற்றை சரியான விகிதத்தில் கலந்து, ஒரு பாத்திரத்தில் போட்டு வறுத்து, அரைத்து இந்த அங்காயப் பொடி தயாரிக்கப்படுகிறது.
அங்காயப் பொடியின் நன்மைகள்
ஜீரண சக்தியை அதிகப்படும். உணவிலுள்ள சத்துக்களை உடல் சரியான அளவில் கிரகிக்க உதவும்.
கொழுப்பைக் கரைக்கும். பெண்களுக்கு பிரசவத்தின் பின்னர் சாதத்தில் அங்காயப் பொடி கலந்து உண்ணக் கொடுப்பார்கள்.
உடலை புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்ளும்.
அங்காயப் பொடியை ஒரு நாளில் ஒரு வேளை சிறிதளவு எடுத்துக்கொள்ள வேண்டும்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










