மதகு வழங்கும் ஆரோக்கிய தகவல்!

Tamil
 – 
ta

காயங்களுக்கு கட்டுப்போடும் போது இவற்றை கவனத்தில்கொள்ளவும்…..

நமக்கே தெரியாமல் சில நேரம் நம் உடலில் காயங்கள் ஏற்படுவதுண்டு. அதற்கு உடனே மருத்துவரிடம் சென்று காயத்துக்கு கட்டுப் போடுகிறோம்.

உண்மையில் காயத்தை கட்டி வைப்பது சரியா? அல்லது திறந்துவைப்பது சரியா?

நமது உடல், மேல் தோல், நடுத்தோல், அடித்தோல் என்று மூன்று வகையான அடுக்களால் மூடப்பட்டுள்ளது.

அதில் மேல் தோலில் மட்டும் ஏற்பட்ட காயம், அதாவது, தோல் கிழிந்திருந்தால், உதாரணத்துக்கு, சுடு தண்ணீல் உடம்பில் கொட்டி அதனால் காயம் ஏற்பட்டிருந்தால் அதை திறந்து வைப்பதுதான் சிறந்தது.

அதுவே காயம் ஆழமானது என்றால் அதனை மூடிக் கட்ட வேண்டும்.

சில புண்களிலிருந்து இரத்தம், நீர், சீழ் போன்றவை வடியும். இவற்றை மூடி வைப்பது சிறந்தது.

அதுவே சிறிய காயங்கள், கீறல்கள், சிராய்ப்புகள் போன்றவற்றுக்கு அன்றாடம் மருந்து தடவி மூடாமல் அப்படியே விட்டால் சீக்கிரம் சரியாகிவிடும். ஆனால், அதில் எதுவிதமான தூசுகளும் சென்று படியாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

அதுவே செல்லப்பிராணிகளால் ஏற்பட்ட மேலோட்டமான காயங்கள் போன்றவற்றுக்கு திறந்து வைத்து சிகிச்சையளித்தால் தான் நல்லது.

தீப்புண் ஏற்பட்டால் சுத்தமான துணியால் மூடி வைக்க வேண்டும்.

இவ்வாறு ஒவ்வொரு வகையான காயங்களுக்கும் ஒவ்வொரு விதத்தில் சிகிச்சையளிக்க வேண்டும்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects