நாட்டின் பல பகுதிகளில் இன்று இரவு வேளைகளில் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான அபாயம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன் அடிப்படையில், கிழக்கு, ஊவா, மத்திய, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பலத்த மின்னல் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மன்னார்,காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் நாளை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










