இம் மாதம் 06 ஆம் திகதி அன்று நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, கொழும்பு பங்குச் சந்தை தனது தினசரி பங்கு பரிவர்த்தனைகளை மதியம் 12:30 மணிக்கு முடிவுக்கு கொண்டுவரும் என கொழும்பு பங்குச் சந்தை அறிவித்துள்ளது.
பொதுவாக, பங்குச் சந்தையின் தினசரி பரிவர்த்தனை அமர்வு காலை 9:30 மணி முதல் மாலை 2:30 மணி வரை இயங்குகிறது.
இருப்பினும், முதலீட்டாளர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட சந்தைப் பங்கேற்பாளர்களின் வசதிக்காக, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் நாளில் வழக்கமான நேரத்திற்கு முன்னதாக பங்கு பரிவர்த்தனைகளை முடிவுக்கு கொண்டுவருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










