நாட்டில் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதைத் தரவுகளின் ஊடாக அவதானிக்க முடிவதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன் அடிப்படையில், டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்கள் நாட்டில் ஒரு பொது சுகாதாரப் பிரச்சினையாக உருவெடுத்து வருவதாகவும் சுகாதார பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, கடந்த 20 ஆண்டுகளில் பதிவாகாத அளவில் இலங்கையில் தற்போது குறிப்பிடத்தக்க அளவில் சிக்குன்குனியா நோய் பரவல் அதிகரித்துள்ளதாக வைரஸ் தொடர்பான நிபுணர் வைத்தியர் நீலிகா மாலவிகே கூறுகிறார்.
எக்ஸ் பதிவொன்றின் ஊடாக இதனைக் குறிப்பிட்டுள்ள அவர்,
மேலும், இந்த நோய் பரவலுக்குக் காரணமான வைரஸ் திரிபுகள் குறித்து தமது குழுவினர் முழு மரபணு பரிசோதனை நடத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










