மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பெற்றோர்களின் உணர்வுகள் மற்றும் நடத்தைகளை கையாள்வதற்கான மனோகரி விழிப்புணர்வு செயலமர்வானது மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் புதிய மாட்ட செயலகத்தில் இடம் பெற்றது.
குறித்த செயலமர்வானது மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்தின் மேற்பார்வையின் கீழ் இடம் பெற்றது.
சமூக மட்டத்தில் காணப்படும் பிரச்சினைகளைத் சிந்தித்து தீர்த்து வைப்பதற்கும் சமூகத்தில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்துவதற்குமாக இக் கற்கை நெறி அமைந்திருந்தது.
இதன் போது சுய ஒழுக்கம், சுய வழிகாட்டுதல், சுய கண்காணிப்பு, உண்மைத் தன்மையை அறிதல் மற்றும் தொடர்புடைய பல விடயங்கள் தெளிவூட்டப்பட்டது.
தனிநபர், குடும்பம், சமூகம் என்பவற்றிற்கு தேவையாக கருதப்படும் விடயதானங்கள் தொடர்பான விழிப்பூட்டல்கள் இதன் போது வழங்கப்பட்டன.
இச் செயலமர்வில் ஓய்வு பெற்று பிரதி கல்வி பணிப்பாளர் என்.தயானந்தன், வடமாகாண உளசமூக வளநிலையத்தின் ஓய்வு நிலை உதவி முகாமையாளர் செல்வி சிவபாதசுந்தரம் உதயகலா ஆகியோர் வளவாடியமை குறிப்பிடத்தக்கது.














இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










