கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் 14.08.2025 அன்று 10 மணித்தியால நீர் விநியோகத்தடை அமுலாக்கப்படவுள்ளதாகத் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
நாளை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த நீர் விநியோகத் தடை அமுலாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் படி, நிட்டம்புவ, கந்தஹேன, மாபாகொல்ல, கஸ்தெனிய, பின்னகொல்லவத்த, கொலவத்த, கொரக்கதெனிய, ரன்பொகுனுகம, ரன்பொகுனுகம வீடமைப்புத் திட்டம், படலீய, அத்தனகல்ல, பஸ்யால, ஊருபொல, திக்கந்த, மீவிட்டிகம்மான, பாஇம்புல, மடலான, பக்கல்ல, அலவல, கலல்பிட்டிய மற்றும் எலமுல்ல ஆகிய பிரதேசங்களில் இந்த நீர் விநியோகத் தடை ஏற்படுத்தப்படவுள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










