2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் தற்சமயம் வௌியிடப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன் பிரகாரம், பரீட்சை பெறுபேறுகளை பார்வையிட https://www.doenets.lk/examresults எனும் இணைய தளத்தை பயன்படுத்த முடியுமென அத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை கடந்த ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி நடைபெற்றது.
நாடு முழுவதும் ஸ்தாபிக்கப்பட்டிருந்த 2,787 பரீட்சை நிலையங்களில் மொத்தமாக 307,951 பரீட்சார்த்திகள் குறித்த பரீட்சைக்குத் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










