2025 புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியாகின!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று (04.09.2025) அதிகாலை வெளியாகியுள்ள நிலையில்,

நாடளாவிய ரீதியில் 2,787 பரீட்சை நிலையங்களில் நடத்தப்பட்ட இப் பரீட்சையில், மூன்று இலட்சத்து 7 ஆயிரத்து 951 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.

இந் நிலையில், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திற்குமான வெட்டுப்புள்ளியை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

அதன் அடிப்படையில், கொழும்பு, களுத்துறை, கண்டி, காலி, மாத்தறை, குருநாகல், மாத்தளை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் தமிழ் மொழிமூல பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளி 134 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அம்பாறை, நுவரெலியா, பதுளை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கான வெட்டுப்புள்ளி 132 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், திருகோணமலை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தமிழ் மொழிமூல பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளி 131 ஆகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects