இலங்கை போக்குவரத்துச் சபையில் அறிமுகப்படுத்தப்படும் சீர்திருத்தங்களின் கீழ், புதிதாக பணியமர்த்தப்படும் பெண் சாரதிகள் மற்றும் நடத்துநர்களுக்கு விமானப் பணிப்பெண்கள் அணியும் ஒப்பான சீருடைகள் வழங்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தலங்கம இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து நிலையத்தில் 25 டிப்போக்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
மேலும் நிகழ்வில் கருத்து தெறிவித்த போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர்,
450 சாரதிகள் மற்றும் 300 நடத்துனர்களை பணியமர்த்துவதற்கான நேர்காணல்கள் நடைபெற்று வருவதாகவும், அதில் பெண் ஊழியர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆரம்ப கட்டத்தில், இத் திட்டம் விரிவுபடுத்தப்படுவதற்கு முன்பு, கொழும்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலை பஸ்களில் பெண்கள் பணியமர்த்தப்படுவார்கள்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










