மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் பௌர்ணமி கலை விழா!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், மண்முனைப்பற்று பிரதேச செயலகம் மற்றும் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் ஆகியன இணைந்து நடாத்திய பௌர்ணமி கலை விழா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முன்றலில் 06.10.2025 அன்று நடைபெற்றது.

நிகழ்வானது ஆலய பூசையுடன் ஆரம்பமாகி மங்கல வாத்தியங்கள் முழங்க அதிதிகள் அழைத்து வரப்பட்டதைத் தொடர்ந்து, பரமநயனார் அறநெறிப்பாடசாலை மாணவியின் தேவாரத்துடன் ஆரம்பமாகி ஆலய பூசகரால் ஆசியுரை வழங்கப்பட்டது.

மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் தட்சணா கௌரி தினேஷின் வழிகாட்டலின் கீழ் நடைபெற்ற நிகழ்வில் ஆன்மீக அதிதியாக ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பூசகர் என்.சிவாகரன், பிரதம அதிதிகளாக உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.பார்த்தீபன், கணக்காளர் ஏ.மோகனகுமார் மற்றும் கௌரவ அதிதிகளாக கிராம உத்தியோகத்தர் எஸ்.டிலக்‌ஷன், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் மகேசதுரை மலர்விழி, பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ராதா கமலதாஸன், ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத் தலைவர் பா.ரமேசன் ஆகியோர் அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.

அத்துடன் கலைஞர்கள், பொதுமக்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மாணவர்கள், கலைமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects