2026 ஆம் ஆண்டின் பெப்ரவரி 15 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், சுமார் 436,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (19.02.2026) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், இந்த வருடம் 15 நாடுகளை இலக்காகக் கொண்ட உலகளாவிய சுற்றுலா ஊக்குவிப்புத் திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.
உலகளவில் இலங்கையின் பிம்பத்தை மிகச் சிறந்த இடத்திற்கு கொண்டு செல்வதில் வெற்றி பெற்றுள்ளோம். அதன்படி, சுற்றுலாப் பயணிகளின் வருகை ஒப்பீட்டளவில் உயர்ந்த மட்டத்தில் உள்ளது. பெப்ரவரி 15 ஆம் திகதி வரையான நிலவரப்படி, சுமார் 436,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர்.
தங்கள் உலகளாவிய ஊக்குவிப்புத் திட்டத்திற்காக சுமார் 02 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், 15 நாடுகள் இலக்கு வைக்கப்பட்டுள்ளன.
டி20 கிரிக்கெட் போட்டியைக் குறிப்பிட விரும்புகிறேன். அதன் மூலம், சுற்றுலாத் துறையிலிருந்து நிறைய கவனத்தை ஈர்க்க முடிந்தது. கொழும்பில் தங்களுக்கு இருந்த சவால்களில் ஒன்று ஆக்கிரமிப்பு விகிதம். இது தற்போது 100 சதவீதமாக உள்ளது. கொழும்பில் அறைகளுக்கு தேவை உள்ளது என சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க தெரிவித்துள்ளார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










