செவ்வாய் கிரகம் பற்றிய புதிய தகவல்கள்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

செவ்வாய் கிரகம் என்பது உயிர்வாழத் தகுதியற்ற ஒரு பாலைவனம் என்ற பிம்பத்தை சமீபத்திய ஆய்வு ஒன்று மாற்றியமைத்துள்ளது. ‘PNAS Nexus’ அறிவியல் இதழில் வெளியாகியுள்ள புதிய தகவல்கள், செவ்வாயின் கடும் நச்சு சூழலிலும் சில நுண்ணுயிரிகளால் உயிர் பிழைக்க முடியும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளன.

விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்தில் நிலவும் நச்சுத்தன்மை கொண்ட மண், கடும் குளிர் மற்றும் விண்கல் மோதல்களால் ஏற்படும் அதிர்வுகளை ஆய்வகத்தில் செயற்கையாக உருவாக்கி சோதனை செய்தனர். இதில் ‘யீஸ்ட்’ (Yeast) போன்ற எளிய செல்கள் அந்த கடுமையான சூழலைத் தாங்கி உயிர் பிழைப்பதைக் கண்டு ஆராய்ச்சியாளர்கள் வியந்துள்ளனர்.

இந்த நுண்ணுயிரிகள் தங்களைக் காத்துக்கொள்ள ‘மூலக்கூறு கவசங்களை’ (Molecular Armor) உருவாக்குகின்றன. இந்த கவசங்கள் ஒக்சிசன் இல்லாத இடத்திலும், அதிக கதிர்வீச்சு உள்ள சூழலிலும் அவற்றின் உயிரணுக்களைப் பாதுகாக்கின்றன. இந்த கண்டுபிடிப்பு, செவ்வாய் கிரகத்தில் ஒரு காலத்தில் உயிர்கள் இருந்திருக்கலாம் அல்லது எதிர்காலத்தில் அங்கு உயிரினங்கள் வாழ வாய்ப்புள்ளது என்ற நம்பிக்கையை அதிகரித்துள்ளது.

இச் செய்திaயினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects