நாடளாவிய ரீதியில் 42 பகுதிகள் டெங்கு நோய் பரவக்கூடிய அதி-அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர வெளியிட்டுள்ள அறிக்கையில்,
2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 27,465 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
மேலும், டெங்கு காய்ச்சலினால் இதுவரை 14 மரணங்கள் பதிவாகியுள்ளன.
தற்போது நிலவும் மழையுடனான வானிலையால், வரும் நாட்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
டெங்கு பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களாக மேல் மாகாணத்தின் கொழும்பில் 5,930 பேரும், கம்பஹா 4,465 பேரும் மற்றும் களுத்துறையில் 1,572 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










