கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்க்காக மீண்டும் நிதியுதவி வழங்கவுள்ள ஜப்பான்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கண்ணிவெடி அகற்றும் மனிதாபிமான பணிகளுக்கு ஆதரவளிப்பதற்காக, 1.34 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான புதிய நிதியுதவியை வழங்கவுள்ளதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.

இதன்மூலம் இலங்கையின் யுத்தத்திற்கு பின்னரான மீட்சி நடவடிக்கைக்கான தமது நீண்டகால அர்ப்பணிப்பை ஜப்பான் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. 

மூன்று தசாப்த கால மோதல்களினால் ஏற்பட்ட வடுக்களுடன் இன்னும் வாழ்ந்து வரும் சமூகங்களுக்கு பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் வாய்ப்புகளை மீட்டெடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர்ச்சியான முயற்சிகளில் இந்தத் திட்டம் மற்றொரு முக்கிய படியாகும். 

ஜப்பானின் அடிமட்ட மனித பாதுகாப்பு திட்டங்களுக்கான மானிய உதவி (GGP) திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இந்த நிதியுதவி, கண்ணிவெடிகள் மற்றும் வெடிக்காத வெடிபொருட்களை அகற்றும் பணிகளை துரிதப்படுத்த உதவுவதுடன், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தங்களது வீடுகளுக்கும் வாழ்வாதாரங்களுக்கும் பாதுகாப்பாக திரும்புவதற்கும் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

இந்த உடன்படிக்கை கையெழுத்திடும் நிகழ்வில் உரையாற்றிய இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசமதா,

இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் மீட்சிக்கான பயணத்தில் ஒரு உறுதியான பங்காளியாக ஜப்பான் தொடர்ந்து ஆற்றிவரும் பங்கினை வலியுறுத்தினார். 

இலங்கையின் யுத்தத்திற்கு பின்னர் மீட்சி நடவடிக்கைகளில் அர்ப்பணிப்புடன் செயல்படும் ஒரு பங்காளி என்ற வகையில், உள்நாட்டுப் போர் முடிவடைவதற்கு முன்பிருந்தே, அதாவது 2002 ஆம் ஆண்டு முதல் கண்ணிவெடி அகற்றும் திட்டங்களுக்காக ஜப்பான் சுமார் 49 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது. 

இன்றைய உடன்படிக்கையானது, குறிப்பாக மோதல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள சமூகங்களுக்கு எமது தொடர்ச்சியான ஆதரவிற்கான மற்றொரு சான்றாகும் என்று அவர் கூறினார். 

ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின் (UNDP) ஊடாக மேலும் 1.6 மில்லியன் அமெரிக்க டாலர் மானியம் அங்கீகரிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய தூதுவர் இசமதா, 2026 ஆம் ஆண்டுக்கான ஜப்பானின் விரிவான அர்ப்பணிப்பை மேலும் எடுத்துரைத்தார். 

இந்தத் திட்டம் கண்ணிவெடி அகற்றும் திறனை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுவதுடன், தற்போதைய கள நடவடிக்கைகளில் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தும் அதேவேளையில், பெண் கண்ணிவெடி அகற்றுநர்களை வலுவூட்டுவதில் சிறப்பு கவனம் செலுத்துகிறது. 

ஒட்டுமொத்தமாக, இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்காக இந்த ஆண்டில் ஜப்பானின் மொத்த பங்களிப்பு சுமார் 3 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த புதிய திட்டத்தின் கீழ், கிட்டத்தட்ட 400,000 சதுர மீட்டர் பரப்பளவிலான நிலப்பரப்பில் கண்ணிவெடிகள் அகற்றப்படும் என எதிர்பார்க்கப்படுவதுடன், இது 3,100 க்கும் மேற்பட்ட இடம்பெயர்ந்த நபர்கள் தங்களது சொந்த நிலங்களுக்குத் திரும்புவதற்கு வழி வகுக்கும். 

அத்துடன், மண்ணுக்கு அடியில் மறைந்திருந்த அச்சுறுத்தல்களால் ஒரு காலத்தில் முடக்கப்பட்டிருந்த விவசாயத்தை விரிவுபடுத்தல், வீடுகளை மீண்டும் கட்டியெழுப்புதல் மற்றும் பொருளாதார வாய்ப்புகளைப் பின்தொடர்தல் போன்றவற்றின் மூலம் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் சுமார் 22,000 மக்கள் பயனடைவர் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇


Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects