100 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான ஒப்பந்தத்தை அமெரிக்காவும் ஈரானும் அறிவித்ததை அடுத்து, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.
அதன்படி பிரெண்ட் ரக மசகு எண்ணெய் 3.55% சரிந்து ஒரு பீப்பாய் 83.77 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.
டபிள்யூ.டி.ஐ மசகு எண்ணெய் 4.10% சரிந்து 80.78 அமெரிக்க டொலராகவும் பதிவாகியுள்ளது.
அத்துடன் மேர்பன் ரக மசகு எண்ணெய் 4.23 சதவீதம் வீழ்ச்சியடைந்து 83.02 அமெரிக்க டொலராக விற்பனை செய்யப்படுகின்றது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போரினால் கடந்த மே மாதம் மசகு எண்ணெய் விலை உச்சம் தொட்டிருந்தது.
இந்நிலையில், குறித்த அமைதி ஒப்பந்தம் தொடர்பில் அவ்வப்போது எழுந்த வதந்திகள் காரணமாக மசகு எண்ணெய் விலை படிப்படியாக வீழ்ச்சியடைந்தது.
அதனடிப்படையில் ஈரானும், அமெரிக்காவும் இன்றைய தினம் சமாதாக உடன்படிக்கை தொடர்பான அறிவிப்பை வௌியிட்டதை தொடர்ந்து மசகு எண்ணெய் சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளது.
இருநாடுகளுக்கும் இடையில் எதிர்வரும் வௌ்ளிக்கிழமை உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டால் மசகு எண்ணெய் விலை மேலும் குறைவடையும் சாத்தியம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










