நாடு முழுவதிலும் உள்ள பாடசாலை விடுதி கட்டமைப்பை விரைவாக அபிவிருத்தி செய்வதற்காக 1,008 மில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நாட்டின் பாடசாலை கட்டமைப்பில் தற்போதுள்ள 126 விடுதிக் கட்டிடங்கள் பாழடைந்த நிலையில் காணப்படுவதனாலும், அவற்றின் பராமரிப்புப் பணிகள் முறையாக இடம்பெறாமையினாலும், அங்கு தங்கியிருக்கும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கும் வாழ்வாதாரத்திற்கும் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக அரசாங்கம் கண்டறிந்துள்ளது.
இந்நிலைக்கு விரைவான தீர்வுகளை வழங்கி, விடுதிகளில் தங்கியிருக்கும் பிள்ளைகளுக்குத் தரமான கல்வி மற்றும் சுகாதாரப் பாதுகாப்புமிக்க சூழலை உருவாக்குவதே இந்தத் திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.
அதன் படி , குறித்த விடுதிகளில் காணப்படும் குறைபாடுகள் மற்றும் அத்தியாவசிய வசதிகளை 2 ஆண்டுகளுக்குள் விரைவாக நவீனமயமாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவினால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த விசேட திட்ட முன்மொழிவுக்கு அமைச்சரவை ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










