மட்டக்களப்பு வாவியை முகாமைத்துவம் செய்தல் தொடர்பான கலந்துரையாடல்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மட்டக்களப்பு வாவியை முகாமைத்துவம் செய்தல் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 09.07.2026 அன்று நடைபெற்றது.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு வாவியில் சேர்கின்ற மண்திட்டிகளை அகற்றுவதற்காக ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்ப கட்ட கலந்துரையாடல் நடைபெற்றது

மாவட்டத்தில் வெள்ள காலங்களில் களப்பின் நீர் மட்டம் அதிகரித்தல், விளை நிலங்கள் தாழ்தல், கண்டல் தாவரங்கள் அழிந்து போதல் உயிர் பல்வகைமையை பாதுகாத்தல் மற்றும் தற்போதைய வாவியின் நிலை போன்ற விடயங்கள் இதன் போது சுட்டிக்காட்டப்பட்டது.

இந் நிகழ்வில் தேசிய நீர்வாழ் வளங்கள் ஆராய்ச்சி நிறுவன ஆராய்ச்சியாளர்கள், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர், மாநகரசபை ஆணையாளர், கிழக்கு பல்கலைகழக விரிவுரையாளர்கள், வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் கரையோரம் பேணல், நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர்கள், பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள், பதவி நிலை அதிகாரிகள், துறைசார் நிபுணர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

கலந்துரையாடலை தொடர்ந்து கள விஜயம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects