கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் – 2025

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டமானது 09.06.2025 அன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச ஒருங்கிணைப்பு குழுத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு தலைமையில் பிரதேச செயலாளர் அமலினி கார்த்தீபனின் வரவேற்புரையுடன் ஆரம்பமாகியது.

இவ் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் பிரதேச செயலக பிரிவில் தற்போது நடைபெறுகின்ற அபிவிருத்தி செயற்பாட்டுத்திட்டங்கள் தொடர்பான முன்னேற்றங்கள் குறித்து ஆராயப்பட்டது.

எதிர்கால அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பான முன்னேற்பாடுகள் பரிந்துரைக்கப்பட்டதுடன் பிரதேச மட்டத்திலான திணைக்களங்களின் தற்போதைய பிரச்சினைகளும் இனங்காணப்பட்டு அதற்கான தீர்வுகளும் முன்மொழியப்பட்டன.

இவ் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் கோறளைப்பற்று வடக்கு வாகரை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் இளையதம்பி சிறிநாத் மற்றும் திணைக்களத் தலைவர்கள், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects