மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான செய்தி!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மின்சார கட்டண திருத்தம் தொடர்பான  இறுதி முடிவு இந்த வாரம் அறிவிக்கப்படும் என்று இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையகம் (PUCSL) தெரிவித்துள்ளது.

முன்மொழியப்பட்ட கட்டண திருத்தம் குறித்து நடத்தப்பட்ட பொது ஆலோசனை செயல்முறையின் போது பெறப்பட்ட 500 க்கும் மேற்பட்ட எழுத்து மற்றும் வாய்மொழி சமர்ப்பிப்புகளை மதிப்பாய்வு செய்த பின்னர் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று மின்சார ஒழுங்குமுறை ஆணையகமான  இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையகம்  தெரிவித்துள்ளது.

இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையகத்தின் தகவல் தொடர்பு இயக்குநர் ஜெயநாத் ஹேரத் தெரிவிக்கையில், 

மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் மதிப்பாய்வு செய்யும் செயல்முறை கடந்த வாரம் நிறைவடைந்துள்ளது.

அவை தொடர்புடைய பரிந்துரைகள் தற்போது தயாரிக்கப்பட்டு முடிந்ததுடன், அவை இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையகத்திற்கு சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.எனவே, இது தொடர்பான இறுதி முடிவு இந்த வாரம் அறிவிக்கப்படும். 

இலங்கை மின்சார வாரியம் (CEB) ஜூன் முதல் டிசம்பர் வரையிலான காலத்திற்கு 18.3% கட்டண உயர்வைக் கோரியிருந்தது. அத்துடன் அதிகரித்து வரும் இயக்க செலவுகளை நிர்வகிப்பதற்கும் முந்தைய கடன்கள் உட்பட கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கும் இது அவசியம் என்று  தெரிவித்திருந்த நிலையில் மின்சாரக் கட்டணத்திற்கான திருத்தம் முன்மொழியப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects